மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
1121 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
1121 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
1121 days ago
வடமதுரை: வடமதுரை மேற்குரத வீதி முனியாண்டி கோயில் ஆடி உற்ஸவ திருவிழா 2 நாட்கள் நடந்தது. நேற்றுமுன்தினம் பால் குடங்களுடன் ஊர்வலமான வந்த பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில் சுவாமி ரத ஊர்வலம் தேரடி வீதிகள் வழியே வலம் வந்தது. நேற்று காலை பொங்கல் வைத்து 25 ஆட்டு| கிடாய்களை வெட்டி பொது விருந்து வழங்கப்பட்டது.* அய்யலூர் அருகே ரோட்டுபுதூர் விலங்கு கருப்பணசுவாமி கோயிலில் 3 நாட்கள் ஆடி உற்ஸவ திருவிழா நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் தீர்த்தம் எடுத்தல், பொங்கல் அழைப்பு 121 ஆட்டு கிடாக்கள் வெட்டி பொது விருந்து வழங்குதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை சுக்காம்பட்டி, அய்யலூர், சித்துவார்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
1121 days ago
1121 days ago
1121 days ago