தீவனுார் விநாயகர் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :1306 days ago
திண்டிவனம், : தீவனுார் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவிலில் மாகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனுாரில் பிரசித்தி பெற்ற சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.அதை முன்னிட்டு, காலை 5;00 மணிக்கு விநாயகருக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட திரவியங்களால், சிறப்பு அபிேஷம் நடந்தது.அதனைத்தொடர்ந்து மாலை 5;00 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 108 சங்காபிஷேகமும், இரவு 7;00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் சகுந்தலா, முகவர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.