உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை மற்றும் அஷ்டமி விழா

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை மற்றும் அஷ்டமி விழா

தாண்டிக்குடி; தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை  விழா மற்றும் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. முன்னதாக சிறப்பு யாகசாலையில் ஹோமங்கள் நடந்தன.ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த பாலமுருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இங்குள்ள காலபைரவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தேங்காய், நெய் ,மிளகு தீபமேற்றி காலபைரவரை வழிபட்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !