பூமாரி அம்மன் கோயில் பால்குட விழா
ADDED :1127 days ago
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள லட்சுமணன் குடியிருப்பில் அருள் பாலிக்கும் பூ மாரி அம்மன் கோயில் பால்குட விழா நடந்தது. இக்கோயிலில் பதினோறாம் ஆண்டு பால்குட விழா, செப். 6 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அப்போது பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று முன்தினம் காலை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பால்குடம் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்து, தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.