மகாநந்தியில் இருந்து வரசித்தி விநாயகருக்கு பட்டு வஸ்திரம்
ADDED :1120 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று மகாநந்தி தேவஸ்தானம் சார்பில் மகாநந்தியில் இருந்து ஸ்ரீ விநாயகர் சாமிக்கு பட்டு வஸ்திரங்களையும் பூஜை பொருட்களையும் மகாநந்தி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகேஸ்வர ரெட்டி ஆகியோர் காணிப்பாக்கம் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபுவிடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். பின்னர் இவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் பிரசாதங்களையும் சாமி படத்தையும் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அதிகாரிகள் வழங்கினர்.