காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு காணிக்கை
ADDED :1119 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு அன்னதானத் திட்டத்திற்காக இன்று தர்மவரம் பகுதியைச் சேர்ந்த நாகபூஷ்ண ராவ் என்ற பக்தர் கோயிலில் நடக்கும் நித்ய அன்னதானத் திட்டத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் காணிக்கையாக கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் புல்லட்.ஜெயசியாம் அவர்களிடம் வழங்கினார். முன்னதாக இவர்களுக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.