புரட்டாசி துவக்கம் : தங்க கவச அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாள்
ADDED :1271 days ago
போடி: புரட்டாசி மாத துவக்கத்தை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியர் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் ஆசி பெற்றனர்.