ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1167 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயர் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயர் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. இதில் சுவாமிக்கு பால், தயிர், நெய், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.