உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முறையூர் கோயிலில் அம்புவிடும் திருவிழா

முறையூர் கோயிலில் அம்புவிடும் திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி அம்புவிடும் விழா நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலில் நவராத்திரி விழா செப். 26 ல் துவங்கியது. ஒன்பது நாளும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சியளித்தார். மகிஷாசுரன் என்று அரக்கனை  விஜயதசமி நாளன்று பார்வதிதேவி அம்பு எய்தி அளித்ததாக புராணம். இதையொட்டி நவராத்திரி நிறைவு நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் வில் அம்புகளுடன்  அம்மன் புறப்பட்டார். 6:00 மணிக்கு சம்ஹார பொட்டலில் சூரனை அம்பு விட்டு வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் சிவாச்சாரியார் 4 திசைகளிலும் அம்பு எய்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !