பூ பல்லக்கில் அம்மன் வீதி உலா
ADDED :1267 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. இறுதி நாள் விழாவாக அம்மன் பூ பல்லக்கில்வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் துவங்கி, அதிகாலை வரை பக்தர்கள் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூக்கடை பஜார், டெலிபோன் ரோடு, வழியாக கோயிலை அடைந்தது. பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.