உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி திருவிழா : போடி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

கந்த சஷ்டி திருவிழா : போடி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

போடி: போடி சுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதனையொட்டி முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோயில் தக்கார் ராமதிலகம் தலைமையில் நேற்று துவங்கியது. முருகனுக்கு கலச சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள், விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளாசி பெற்றனர். கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தினந்தோறும் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !