ஸ்ரீவி. ஆண்டாள் கோவிலில் பெரிய பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம்
ADDED :1065 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னதியில் பெரிய பெருமாள் ஐப்பசி பவுர்ணமி ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு கோபால விலாச மண்டபத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி எழுந்தருளினர். அனிரூத் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.