உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரத்தில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா

சிவாலயபுரத்தில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேக பெருவிழா சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. காலை 8.01 மணிக்கு, அருள்மிகு சங்கரலிங்கம் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கர லிங்கம் சுவாமி, அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்தார். இன்றைய இறைப் பணியில் மேலுரைச் சேர்ந்த சிவ. செல்வகுமார், சிவ. S. பிரியா, சென்னகரம்பட்டியைச் சேர்ந்த சிவ. S. சுந்தரராஜன், சிவ. S. தமிழ்ச்செல்வி, சிவ. S. ஸ்ரீனிவாசன், சிவ.S. காளிதேவி,  குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு  சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம்,  அபிஷேக பால், பஞ்சாமிர்தம், சுவாமிக்கு அலங்காரம் செய்த அபிஷேக காய்கறிகள் பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னம் வானில் வாழும் பறவைகளுக்கும், நிலத்தில் வாழும் புழு பூச்சிகளுக்கும், நீரில்  வாழும் மீன் போன்ற உயிரினங்களுக்கும் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !