ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :1395 days ago
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதேஷ்வரர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பச்சரிசி சாதம், காய்கறிகள், மலர்களால் சுவாமி அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரினம் செய்தனர்.