நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் விரதம் துவக்கிய பக்தர்கள்
ADDED :1227 days ago
ஆண்டிபட்டி: சொக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் பக்தர்கள் கார்த்தியை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். கோயில் நிறுவனர் முத்துவன்னியன் துளசி மாலை அணிந்து விரதத்தை துவக்கி மற்ற பக்தர்களுக்கும் துளசி மாலை அணிவித்தார். பக்தர்கள் ஐயப்ப சுவாமி பாடல்கள் பாடினர்.