நலமான வாழ்விற்கு.... நல்வழி காட்டுகிறார் சாய்பாபா
* உனது நாக்கை கட்டுப்படுத்தினால் வாழ்வு நலமாகும்.
* உன்னிடம் பேராசை இல்லையென்றால் சுதந்திரப் பறவையாக வாழலாம்.
* பொருள் இல்லாதவன் ஏழை அல்ல. பேராசை உள்ளவேனே உண்மையான ஏழை.
* பிறருக்கு அறிவுரை வழங்குவதைவிட, பயனுள்ள செயலில் ஈடுபடு.
* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்.
* கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம் விலங்குகளின் காடாக மாறி விடும்.
* நல்லதை பார்க்கவும், செய்யவும் விரும்புங்கள்.
* மனிதனையும், கடவுளையும் இணைக்கும் பாலமே வழிபாடு.
* தங்கத்தின் மூலம் பல அணிகலன் செய்யலாம். அதுபோல் பல கடவுள் இருந்தாலும் உணர்த்தும் தத்துவம் ஒன்றே.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம்.
* மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரித்தால் கவலை மறையும்.
* கடவுளின் படைப்பு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் பிறருக்கு செய்ய வேண்டும்.
* மனதில் ஆசை எழுந்தால் அது நியாயமானதுதானா என்று யோசி.
* உணவை வீணாக்காதே... அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
* சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் வாக்களித்த படி நடப்பது கடினம்.
* அன்பே சிறந்த முதலீடு. அதை எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது.
* தண்ணீர் குளிர்ச்சியை இயல்பாக கொண்டிக்கும். அதுபோல மனிதனுக்கு அன்பே இயற்கையானது.
* சாப்பிடுவதற்காக உயிர் வாழ்வது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிட வேண்டும்.
* எந்த பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.