சனி தோஷம் குறைய சில எளிய பரிகாரங்கள்!
1.தினமும் காகத்துக்கு அன்னம் வையுங்கள்.
2. சனிக்கிழமைகளில் இரும்பு அகலில் நல்லெண்ணெய் தீபம் சனிபகவான் முன் ஏற்றி வைத்து வணங்குகள்.
3. கருங்குவளை மலர்களை சனீஸ்வரனுக்கு சாத்துங்கள்
4. வன்னி மர இலைகளால் சனிக்கு அர்ச்சனை செய்யுங்கள்
5. சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்.
6. அனுமனுக்கு வடைமாலை சாத்துங்கள்.
7. ஞாயிற்றுக்கிழமை மாலைவேளைகளில் பைரவரை ஆராதியுங்கள்.
8. தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு அர்ச்சனை செய்திடுங்கள்.
9. ஏழைகள், ஊனமுற்றோர், பிணியாளர்களுக்கு இயன்ற உதவி களைச் செய்யுங்கள்.
10. ஏழை மாணவர்கள் படிக்க உதவுங்கள்.
11. கோமாதா பூஜை பண்ணுங்கள்.
12. சித்தர்களின் திருத்தலங்களுக்குச் சென்று வணங்குகள்.
13. திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வில்வம் தந்து தரிசியுங்கள்.
14. சதுர்த்தி நாட்களில் ஆனைமுகனுக்கு அறுகு சாத்தி ஆராதியுங்கள். இவற்றில் உங்களால் இயன்ற எந்தப் பரிகாரத்தைச் செய்தாலும் சனிபகவானின் சங்கடங்கள் குறையும். அதோடு தோத்திரப் பிரியரான சனிபகவானை அவருக்கு உரிய காயத்ரி மந்திரம் அல்லது துதிகளைச் சொல்லி கும்பிடுங்கள். சனிதோஷம் குறையும், சந்தோஷம் அதிகரிக்கும்.