உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் கார்த்திகை பவுர்ணமி வழிபாடு; மழையை பொறுத்து அனுமதி

சதுரகிரியில் கார்த்திகை பவுர்ணமி வழிபாடு; மழையை பொறுத்து அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக இன்று (டிசம்பர் 4) முதல் டிசம்பர் 7 வரை, 4 நாட்கள் தினமும் காலையில் மழை சூழ்நிலையை பொறுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் கடந்த இரு மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படவில்லை. இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கார்த்திகை மாத பிரதோஷ நாளனன இன்று (டிச. 4) முதல் டிசம்பர் 7 வரை 4 நாட்கள் தினமும் மழை சூழ்நிலையை பொறுத்து காலை 6:30 மணிக்கு மேல் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !