சோழீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED :55 minutes ago
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்காடு குப்பத்தில் உள்ள சோழிஸ்வரர் கோவில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் குளம் குபேரன் வழிபட்ட தலம் என்பது வரலாறு. இக்கோவிலின் குளத்தின் படிகள், சுற்றுச்சுவர் 5 ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமடைந்தது. இதுவரை சீரமைக்கப்படவில்லை.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் நீராட முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
அத்துடன் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில், குளத்தை சுற்றி குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. எனவே, சோழீஸ்வரர் கோவில் குளத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.