2023ம் ஆண்டின் முதல் பிரதோஷம் : தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1041 days ago
தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், 2023ம் ஆண்டின் முதல் பிரதோஷம் நேற்று மாலை நடந்தது. இதில் நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், திரவியப்பொடி, சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்களாக அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர். வைகுண்ட ஏகாதசிக்கும் திருவாதிரைப் பண்டிகைக்கும் நடுவே, 2023ம் ஆண்டின் முதல் பிரதோஷம் அமைப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது.