சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1036 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 6: 45 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12 மணி வரை ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே மலையேறினர். மாலை 04:30 மணிக்கு மேல் கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு சாப்டூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.