உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவூர் பொங்கல் விழா: சிறப்பு மலர் அலங்காரத்தில் பத்திரகாளியம்மன்

சேவூர் பொங்கல் விழா: சிறப்பு மலர் அலங்காரத்தில் பத்திரகாளியம்மன்

அவிநாசி: சேவூரில் முத்துக்குமாரசுவாமி பொங்கல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

சேவூரில் உயிருடன் நவகண்டம் கொடுத்து சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவசமாதி அடைந்தார். இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்த நன்னாளாக விழா நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து கடந்த 3ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசாமிக்கும், முசாபாரி தோட்டத்தில் அமைந்துள்ள ஜீவசமாதிக்கும் இரு வேலையும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம் சென்றனர். அதனைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமி ஜீவசமாதியிலும், பத்ரகாளி அம்மனுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !