சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1020 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
* அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில், அடிவாரம், மலை குகை கோயில் ஆகிய இடங்களில் மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.