உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் தை அமாவாசை நிகும்பலா யாகம்

பாதூர் பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் தை அமாவாசை நிகும்பலா யாகம்

உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடத்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடத்தது. அதனையொட்டி நேற்று காலை 10.30 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டு மிளகாய் வற்றல் யாக குண்டத்தில் சாற்றட்டப்பட்டது. இந்த யாகத்தில் பழங்கள், புடவைகள், நெய், பிரசாதம் சாற்றப்பட்டன. பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறக்கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது. தை அமாவாசையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !