சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி
ADDED :1161 days ago
சிதம்பரம்: குடியரசு தினத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் 74 வது குடியிரசு தினத்தையொட்டி ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றபட்டது. முன்னதாக பொது தீட்சிதர்கள் சார்பில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர் சன்னதி சித்சபையில் தேசியக்கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து. மேள தாளங்கள் முழங்க கிழக்கு கோபுர உச்சிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கீழவீதி ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது கடந்த 1950ம் ஆண்டு முதல், குடியரசு தினத்தன்று இக்கோவிலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.