வெள்ளிக்கவசத்தில் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் அருள்பாலிப்பு
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், கடந்த 10ம் தேதி சிவராத்திரி விழா துவங்கியது.
ஒவ்வொரு நாளும், காலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் நாள் முதல் ஒவ்வொருநாளும், மூஷிக, பல்லக்கு, சந்திரபிரபை, காமதேனு, நேற்று பூத வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று ஆறாம் நாள் அதிகார நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 18ம் தேதி சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதே நாளில் சனி மஹாபிரதோஷ விழா நடைபெறும். அன்று மாலை 4:00 மணிக்கு மூலவர் வால்மிகீஸ்வரர், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். நேற்று, பள்ளிகொண்டீஸ்வரர் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.