வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1065 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் கேட்டுகடையில் வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயில் உள்ளது. இன்று மாசி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு பல்வகை மலர்களால் அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. உலக நன்மை வேண்டி பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி தனம் அம்மாள் குடும்பத்தினர் செய்திருந்தனர். காஞ்சாரம்பேட்டை பாரைப்பட்டி பேசும் கன்னிமார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முன்னதாக சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோயில்களில் வழிபாடுகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.