உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் தேர், தேங்காய் தொடும் முகூர்த்தம்

திருப்பரங்குன்றம் கோயிலில் தேர், தேங்காய் தொடும் முகூர்த்தம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் முகூர்த்தம் மற்றும் தேங்காய் தொடும் முகூர்த்தம் நேற்று நடந்தது.

கோயிலில் இருந்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மாலை, சந்தனம், குங்குமம் ஆகியவற்றை மேளதாளத்துடன் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு உதவி கமிஷனர் சுரேஷுக்கு மரியாதை செய்து தேங்காய் பழம் கொடுக்கப்பட்டது. அவரிடம் பங்குனி திருவிழா விபரங்கள் அடங்கிய குறிப்புகள் வழங்கப்பட்டு, திருவிழா நடப்பதற்கான நாட்கள் குறிக்கப்பட்டது. பின்பு கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு பூஜை முடிந்து யாகசாலை பூஜை நடந்தது. கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைர தேரில் உள்ள கருப்பண சுவாமி, தராசு முருகனுக்கு பூஜை தீபாராதனை முடிந்து சுத்தியல்கள், உளி ஆகியவற்றிற்கு பூஜை நடந்தது. பேஷ்கார் நெடுஞ்செழியன், பணியாளர்கள் பங்கேற்றனர். மார்ச் 26ல் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !