உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : யானை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு

ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : யானை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் (தெப்பத்) திருவிழாவின்6ம் திருநாளான நேற்று மாலை உற்சவர் நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு உத்திரை வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று  7ம் திருநாளான மார்ச் 1ம் தேதி மாலை நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உத்திர வீதிகளில் திருவீதி உலாவந்து இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8ம் நாளில் முக்கிய வைபமான தெப்பத் திருவிழா  மார்ச் 2ம் தேதி நடைபெறகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் திரு.செ.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !