உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் பைரவர் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். நேற்று காலை 11:30 மணிக்கு பலவித திரவியங்களால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பாஸ்கர குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்களின் பூஜைகள் நடந்தன. சுவாமி சந்தனக்காப்பில் அருள்பாலித்தார். பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !