உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் லட்சார்ச்சனை

மயிலம் முருகன் கோவிலில் லட்சார்ச்சனை

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 9:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. 11:00 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாராதனைக்கு பின் மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !