உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிஷேகம்

நெல்லீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிஷேகம்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை உடனுறை நெல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில், சிறிய குடிசையில் இருந்ததுவந்தது. பிரதோஷம் உட்பட விசேஷ நாட்களில், அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு செல்வர். குடிசையை அகற்றி, புதிதாக கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கிராம மக்கள் ஒத்துழைப்புடன் மூலவர் சன்னிதி, அம்பாள் சன்னிதி, பைரவர் சன்னிதி, துர்கை சன்னிதி, நந்தி மண்டபம், நவக்கிரக சன்னதி என, தனித்தனி சன்னதிகள் அமைத்தும், கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைத்தும் பணிகள் முடிக்கப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இக்கோவிலில், வரும் 27ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மஹா கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !