சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா துவங்கியது
ADDED :924 days ago
கடலுார் : கடலுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார், புதுவண்டிப்பாளையம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தினமும், காலை, இரவு வீதியுலா நடக்கிறது. 31ம் தேதி இரவு பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் முன்னிலையில் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டம், 4ம் தேதி காலை 11:00 மணிக்கு 108 சங்கு பூஜை அபிஷேகம், யாக சாலை கலச பூஜை அபிஷேகம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.