சனிப்பெயர்ச்சி : புஷ்ப அலங்காரத்தில் சனிபகவான் அருள்பாலிப்பு
ADDED :960 days ago
கோவை : முத்துமாரியம்மன் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு சனிபகவான் அருள்பாலித்தார்.
கோவை ராம்நகர் முத்துமாரியம்மன், ஸ்ரீமங்களா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நவக்கிரக சன்னிதியில் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து வெள்ளி காப்பு அலங்காரம், புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சனிபகவானை பரிகாரம் செய்து வழிபட்டனர்.