திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :888 days ago
திருவண்ணாமலை : கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவில், கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். கோயில் இரண்டாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக மேட் (தரைவிரிப்பு) அமைக்கும் பணியில் பெண் ஊழியர்கள் ஈடுபட்டனர்.