உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையிலுள்ள, அண்ணாமலையார் மலையை, பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், பங்குனி மாத  பவுர்ணமி திதி நாளை, 5ம் தேதி காலை, 10:17 மணி முதல், நாளை மறுநாள், 6ம் தேதி காலை, 10:58 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் ,கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !