லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவம்
கீழக்கரை: கீழக்கரை அருகே லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. சன்னதி முன்பு கொடியேற்றம் நடந்தது. இன்று காலை 7:00 மணி அளவில் நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தது. மூலவர் முத்துமாரி அம்மனுக்கு தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தர்ம முனீஸ்வரர், விநாயகர், முருகன், நாராயணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவர்களுக்கு சந்தன காப்பு, மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜையும், இரவில் கரகம், அக்னிசட்டி ஊர்வலமும் நடந்தது. ஏற்பாடுகளை லட்சுமிபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.