உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 45.99 லட்சம் உண்டியல் வருமானம்

திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 45.99 லட்சம் உண்டியல் வருமானம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள் உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர்கள் சுரேஷ், ராமசாமி, தக்கார் பிரதிநிதி செந்தில், அலுவலக கண்காணிப்பாளர் ரஞ்சனி, உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன், மேலூர் சரக ஆய்வர் அய்யம்பெருமாள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 45,99,636. தங்கம் 247 கிராம், வெள்ளி 1,735 கிராம் இருந்தது‌. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேதபாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கம், பக்தர்கள் பேரவையினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !