உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு

மயிலம் முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு

மயிலம், :மயிலம் முருகன் கோவில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், மூலவர் சன்னதிகளுக்கு மஹா தீபாராதனை, வழிபாடு நடந்தது. 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !