உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

சாத்துார்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டது.

விருதுநகர் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் வளர்மதி, கோயில் உதவி ஆணையர் கருணாகரன், கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி . முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் பொதுமக்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். ரொக்கமாக ரூ.42,16,716, தங்கம் 119 கிராம், வெள்ளி 627 கிராம் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தனர். காணிக்கை பொருட்கள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. கோயில் உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !