உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை திரளானவர்கள் பங்கேற்பு

நாகையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை திரளானவர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் இன்று நடந்த, ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர். சகோதரத்துவத்தையும்,ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக ,முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை, நாகை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாகூர், கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாகூர், ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நாகை,யாஹுசைன் பள்ளி, மோர்ஷா பள்ளி,சாகுல் ஹமீது பள்ளி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. அனைத்து இடங்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்திய பின் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !