/
கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு மே 1ல் குன்றத்து சுவாமிகள் புறப்பாடு
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு மே 1ல் குன்றத்து சுவாமிகள் புறப்பாடு
ADDED :946 days ago
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளுடனும் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மே. 1ல் புறப்பாடாகிறார். மே 2 அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று, மே 6ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெற்று திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். திருப்பரங்குன்றம் கோயில் நடை வழக்கம் போல் திறக்கப்பட்டிருக்கும்.