உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகத்திலேயே 3வது பெரிய தேர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் தேரோட்டம்

தமிழகத்திலேயே 3வது பெரிய தேர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் தேரோட்டம்

தஞ்சாவூர்:‌‌ தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 3வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் சாரங்கபாணி கோவில் திகழ்ந்து வருகிறது.

இக்கோவிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி கருட சேவை வைபவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி தேரில் எழுந்தருளினார். பின்னர், தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்திலேயே 3வது பெரிய தேரான இந்தத் தேர், அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 500 டன் எடையிலுள்ளது. இந்தத் தேரின் 4 சக்கரங்கள் 9 அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினாலான அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியிலுள்ள 2 குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலத்தில், 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தேரோட்டத்திற்காக,  12 இன்ச் உயரம், 10 இன்ச் அகலத்திலும், ஒன்றரை அடி நீளத்திலும் தலா  25 முதல் 30 கிலோ இடையிலான 250 முட்டு கட்டைகள்  வாகமரத்தில் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !