உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் வைகாசி அமாவாசை வழிபாடு; இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் வைகாசி அமாவாசை வழிபாடு; இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக இன்று (மே.17) முதல் (மே.20) வரை நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகாசி பிரதோஷ வழிபாடு, மே 19 அமாவாசை வழிபாட்டிற்காக இன்று மே.17 முதல் மே 20 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டுமென கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !