வேதபுரீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :1184 days ago
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் 38 வது ஆண்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி காந்தி வீதியில் திரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில்உள்ளது. இங்கு, புதுச்சேரி வேதபுரீஸ்வரர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நேற்று காலை 8.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிவசங்கரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.