செய்த உதவியை சொல்ல வேண்டாம்
ADDED :1073 days ago
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கும். ஆனால் சிலர் ‘நான் இவரது மகனின் படிப்புச் செலவை ஏற்றேன், இன்னாருக்கு மருத்துவச் செலவுக்கு பணம் கொடுத்தேன’ என சொல்லிக்காட்டுவர். இது தவறான விஷயம். அதுமட்டும் இல்லை. இப்படி சொல்பவர்களுக்கு உதவி செய்ததற்கான நன்மையும் கிடைக்காது. இறைவனும் இவர்களை சந்திக்க விரும்பமாட்டான்.