மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED :1154 days ago
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமி, சேக்கிழார் ஆகியோருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நடராஜர் ருத்ராட்சம் ரதத்திலும், மற்றவர்கள் சிறப்பு வாகனங்களிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆனி திருமஞ்சனம் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.