உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் யாகபூஜை, அன்னாபிஷேகம்

பழநி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் யாகபூஜை, அன்னாபிஷேகம்

பழநி: பழநி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் யாகபூஜை நடைபெற்றது.

பழநி முருகன் கோயிலில் உச்சிகால பூஜைக்கு முன் பாரவேல் மண்டபத்தில் 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. யாக பூஜையை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்ரமண்ய குருக்கள் நிகழ்த்தினர். யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களை எடுத்து கோயில் உட்புறத்தில் வலம் வந்தனர். சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம், சங்காபிஷேகம், அன்னாபிஷேகம் நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேல், ராகவன், கார்த்திகேயன், நாகராஜன், குமரகுருபரன், அசோக்குமார், செந்தில்குமார், மற்றும் கோயில் அறங்காவலர்கள், மிராசு பாண்டாரங்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !