பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா கோலாகலம்
ADDED :1004 days ago
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவின் 122 ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு, கந்தூரி விழா நடந்தது. தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணைத் தலைவர் சிராஜுதீன், எம்.சாகுல் ஹமீது, இக்மத், செயலாளர் ஹபீபு, துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, சீனி முஸ்தபா, எம்.பசீர், களஞ்சியம், பொருளாளர் சகுபர் சாதிக், சீனி சேகு, விழா அமைப்பாளர் எச். அப்துல் மஜீத், ஆடிட்டர் அஸ்கர் அலி, நிர்வாகிகள் ஜாகிர் உசேன், முகமது உசேன், அப்துல் ரஹீம், சிங்கம் பஷீர், பயாஸ்கான், சொக்கலிங்கம், ரவி, சேகர், பஞ்சமுத்து, பஞ்சவர்ணம், காயாம்பு, கார்த்திகை செல்வன் உட்பட சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள், பெரியபட்டினம் தர்கா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.