தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :895 days ago
தாண்டிக்குடி , தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் ஹோமங்கள் நடந்தன. பக்தர்கள் நெய், தேங்காய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.